சௌபாத்தியா எனும் இந்த புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் ராணிக்கேத் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு 200 வகையான பழங்கள் மற்றும் மலர்கள் வளரும் செழிப்பான தோட்டங்கள் அமைந்திருக்கின்றன.
இந்த பழத்தோட்டங்களில் ஆப்பிள், பீச், பிளம் மற்றும் ஏப்ரிகாட் போன்ற பழங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. சில்வர் ஓக், ரோடோடென்ரோன், சைப்ரஸ், செடார் மற்றும் பைன் மரங்கள் நிரம்பிய காடுகள் இந்த தோட்டங்களை சூழ்ந்திருக்கின்றன.
அரசு ஆப்பிள் தோட்டம் மற்றும் பழ ஆராய்ச்சி மையம் ஆகிவையும் இப்பகுதியில் அமைந்துள்ளன. ஒரு பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமாகவும் இந்த இடம் அறியப்படுகிறது. தவிர பனிமூடிய இமயமலைச்சிகரங்களையும், நந்ததேவி, நீலகண்ட், நந்தகுந்தி மற்றும் திரிசுல் போன்ற இதர சிகரங்களையும் இந்த ஸ்தலத்திலிருந்து பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.