ரத்னகிரி நகரத்திலுள்ள ஒரு பிரம்மாண்ட கடற்கரை இந்த மாண்டவி பீச் ஆகும். இது ராஜிவாடா துறைமுகத்திலிருந்து தெற்கில் அரபிக்கடல் வரை நீண்டு காட்சியளிக்கிறது.
இங்குள்ள மணல் கருப்பாக காணப்படுவதால் இந்த கடற்கரைப்பகுதி கருங்கடல் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது ரத்னகிரியின் நுழைவாயில் என்று பிரசித்தமாக அறியப்படுகிறது.
ரத்னகிரி கடற்கரைப்பகுதி ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாஸ்தலமாக இருப்பதுடன் அல்லாமல் பலவிதமான நீர்விளையாட்டு பொழுது போக்கு வசதிகளையும் கொண்டுள்ளது. சாகச பொழுதுபோக்குகளுக்கு நீங்கள் தயார் என்றால் இந்த கடற்கரையில் அவை ஏராளம் உள்ளன.