மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் நகரம் ரேவா. மாவட்டத்தின் தலைநகராக அமைந்திருக்கும் ரேவாவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமங்கள் பல உள்ளன. இதனைத் தவிர, இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை அழகும், மனிதனால் படைக்கப்பட்ட அற்புதங்களையும், ரேவா நகரில் ஒரு சேர காணமுடியும்.
வெள்ளைப் புலிகளுக்கு புகழ் வாய்ந்த நகரம் ரேவா. இப்படி நம் மனதைக் கொள்ளை கொள்ளும் பல அழகிய சுற்றுலாத் தலங்களை கொண்டு விளங்குகிறது ரேவா நகரம். பிஞ் பஹார், வடக்கு கீழ் பகுதி, கைமோர் பஹார் மற்றும் ரேவா பகுதி என நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
புலிகள் சரணாலயம் தவிர்த்து, ரேவா நகரில் பாகேல் அருங்காட்சியகம், ரேவா கோட்டை, பிலி கோதி, கோவிந்த்கர் கோட்டை, கோவிந்த்கர் அரண்மனை, வெங்கட் பவன், ரானி தளாப் கிணறு, ஏபிஎஸ் பல்கலைக்கழக அரங்கம், பைரோம் பாபா சிலை, ராணிபூர் கர்ச்சூலியான், கியோந்தி நீர்வீழ்ச்சி, பூர்வா நீர்வீழ்ச்சி, சாச்சாய் நீர்வீழ்ச்சி என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல இடங்கள் உள்ளன.
ரேவா நகரின் வரலாறு
நர்மதா ஆற்றின் மற்றொரு பெயர் ரேவா என்பதாகும். கி.பி 3-ஆம் நூற்றாண்டில், இம்மாவட்டத்தில் உள்ள பகுதிகளை, மௌரிய சாம்ராஜய அரசர்கள் ஆட்சி புரிந்திருக்கின்றனர். மேலும், முதன் முதலாக வெள்ளைப் புலியைக் கண்டதும் ரேவாவில் தானாம்.
ரேவாவை அடைவது எப்படி?
விமானம், ரயில் அல்லது சாலை வழியாக எளிதில் ரேவா நகரை அடையமுடியும். கஜூரஹா விமான நிலையத்தில் இறங்கி, கார் அல்லது பேருந்து மூலம் ரேவாவை அடையலாம். ரேவாவில் ரயில் நிலையம் உள்ளது.
இது நகருக்கு மிக அருகில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எளிதில் இங்கு வர முடியும். மேலும் கஜூராஹாவில் இருந்து பல பேருந்துகள் ரேவாவுக்கு இயக்கப்படுகின்றன. இதன் மூலமாகவும் ரேவா நகரை அடையலாம்.
ரேவா நகரை ரசிக்க ஏற்ற காலம்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும் மழைக்காலத்தில் ரேவாவின் அழகை முழுமையாக ரசிக்க முடியும்.



Click it and Unblock the Notifications