"பூமியின் தொப்புள்" என்று அழைக்கப்படும் யு லும் சொஹ்பெட்ப்நெங், செங் காசி நம்பிக்கையாளர்களின் புனித ஸ்தலமாகும். பூமியையும் சொர்கத்தையும் இணைக்கும் கோல்டன் வைன் பாலம் யு லும் சொஹ்பெட்ப்நெங்கின் உச்சியில் உள்ளது என்று புராணங்கள் கூறுகின்றன.
இருப்பினும் பூமியில் பாவங்கள் அதிகரித்துக் கொண்டே போவதால் சொர்கத்தை இணைக்கும் ஏணி உடைந்து விட்டதாக நம்பப்படுகிறது. காசி சமுதாயத்தை சேர்ந்த 7 பழங்குடி இனத்தை கொண்ட கி ஹின்நீவ்ட்ரெப் (ஏழு குடிசைகள் என்று பொருளாகும்) என்பவர்கள் தான் இந்த உலகத்தில் குடியேறிய முதல் மக்கள் என்றும் நம்பப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையில் செங் காசி இனத்தை சேர்ந்த மக்கள் பழங்குடி புனித பயணம் மேற்கொள்வர். மலை உச்சியை அடிய ஒன்றரை மணி நேர நீண்ட பயணத்தை மேற்கொள்வார்கள்.
உச்சியை அடைந்த பின் சில சாஸ்திர சம்பிரதாயங்களில் ஈடுபடுவார்கள். கூடவே பாரம்பரிய இசையும் நடனமும் நடைபெறும். சுற்றுலா வரும் பயணிகள் மலை உச்சியில் இருந்து நகரத்தின் கண் கொள்ள அழகை கண்டு மகிழலாம்.
உமியம் ஏரிக்கு அருகில் இருக்கும் யு லும் சொஹ்பெட்ப்நெங் மலை உச்சி 1,344 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஷில்லாங்கிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த மலையை டாக்சி அல்லது டூரிஸ்ட் வாகனம் மூலமாக வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications