`சில்சார்' தெற்கு அசாமில் உள்ள ஒரு மிகச் சிறந்த சிறிய நகரம் ஆகும். மேலும் இது `சச்ஹர்' மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இயற்கை அன்னையின் படைப்பில் இந்த சிறிய நகரம் அதன் தனிச் சிறப்பு மிக்க வழியில் அழகாக உள்ளது. இந்த நகரத்தை சூழ்ந்து பாய்ந்து செல்லும் பராக் நதி, இந்நகரத்தின் அழகிற்கு மேலும் அழகு சேர்கிறது. பாரக் நதி இந்த பகுதியில் பாய்கிறது என்பதால், சில்சார் மற்றும் அதற்கு அருகிலுள்ள சில பிற நகரங்கள் மற்றும் கிராமங்கள் பொதுவாக பாரக் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகின்றன.
புவியியல் நிலை காரணமாக இது மணிப்பூர் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாக, சில்சார் பொருளாதார ரீதியாக ஒரு துடிப்பான நகரமாக விளங்குகிறது.
இதைத்தவிர அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் சில்சாரின் பொருளாதாரம் மேலும் மேம்பாடு அடைய உதவுகின்றன. சில்சாரில் அரிசி, தேயிலை மற்றும் பிற விவசாய பொருட்களை பதப்படுத்தும் மையங்களும் உள்ளன.
சில்சார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்
சில்சார் சுற்றுலா, சுற்றுலா பயணிகளுக்கு ஏராளமான ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நகரின் யூகிக்ககூடிய தோற்றம் பலருக்கு ஏமாற்றத்தை தரலாம். ஆனால் உள்செருகப்பட்ட கோயில்கள் மற்றும் பிற சுற்றுலா தலங்கள் இந்த நகரத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
சில்சார் சுற்றுலாவின் பிரதம இலக்காக கன்ச்சா காந்தி தேவி கோவில் உள்ளது. இது நகர மையத்தில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு பெரும் திரளாக உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் வழிபடுவதற்காக வருகின்றனர். இந்த நகரத்தின் பிற முக்கிய சுற்றுலா தளங்களாக பூபன் மகாதேவ் கோவில், தியாகிகள் கல்லறை மற்றும் காஸ்புர் ஆகியன உள்ளன.
சில்சாரை எவ்வாறு அடைவது?
சில்சாரில் செயல்பாட்டு விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த தெற்கு அசாம் நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் தேசிய நெடுங்சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விமான நிலையத்திற்கு கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவில் இருந்து தினசரி சேவை உள்ளது.
இந்த நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 44ன் தற்போதைய நிலை (ஷில்லாங் மூலம் கவுகாத்தியை இணைக்கும் தேசிய நெடுங்சாலை சில்சார் வழியாக செல்கிறது) சொல்லிக் கொள்ளும் படி இல்லை.
சில்சார் வானிலை
சில்சார் ஈரப்பதமான கோடை, கணிசமான மழை மற்றும் இனிமையான குளிர்காலத்தை கொண்ட ஒரு வெப்பமண்டல பருவத்தை பெற்றிருக்கிறது.