கன்ச் காந்தி மந்திர் (கன்ச்சா காந்தி மந்திர் எனவும் அழைக்கப்படுகிறது) எனப்படும் இந்த கோவில், நான்கு கைகளிலும் ஆயுதம் ஏந்திய காளி மற்றும் துர்க்கை அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.
இது சில்ச்சாரில் உள்ள புகழ்பெற்ற மற்றும் புனிதமான வழிபாட்டு தலமாகும். இது நகரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கன்ச்சா மந்திர் அன்னை சக்திக்காக எழுப்பப்பட்ட மிக முக்கியமான கோவிலாகும்.
இங்குள்ள தேவி, காளி மற்றும் துர்க்கையின் அம்சமாக கருதப்படுகிறாள். இந்த கோவில் 1806 ம் ஆண்டு கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள அன்னையின் சிலை நான்கு கைகளிலும் ஆயுதம் ஏந்திய நிலையில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் உள்ளது.
இங்கு குடிகொண்டுள்ள அன்னை தனக்கு தானே கோவில் கட்டிக் கொண்டதாக நம்பப்படுகிறது. இங்கு அரசாண்ட மன்னரின் கனவில் வந்து அன்னை தனக்கு நான்கு கரங்களுடன் கூடிய சிலை அமைத்து கோவில் கட்டுமாறு கட்டளை இட்டதாகவும், அதை சிரமேற்கொண்டு அந்த அரசரும் அன்னைக்கு கோவில் எழுப்பியதாகவும் நம்பப்படுகிறது. பக்தர்கள் ஆண்டு முழுவதும் அம்மனை தரிசிக்க இந்த ஆலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலின் கட்டிடக்கலை மிகவும் எளியது ஆனால் அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆகவே இது சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் ஒரு டாக்ஸி அல்லது பேருந்தை பயன்படுத்தி நகரத்தின் மையத்தில் இருந்து இந்தக் கோவிலுக்கு செல்ல முடியும்.