பராபாணி என்றழைக்கப்படும் உமியம் ஏரி மேகாலயா மாநிலத்தில் உள்ள ரி போய் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். 1960-களில் உமியம் நதிக்கு மேல் நீர்-மின் அணை கட்டும்போது இந்த ஏரி உருவாக்கப்பட்டது. தற்போது பலவகை விளையாட்டு வசதிகள் மற்றும் தீரச் செயல்கள் புரியும் வசதிகளும் இந்த ஏரியில் அளிக்கப்படுவதால் இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
மலைகள் சூழ்ந்ததுள்ள இந்த இடத்தில் மேகலாயா சுற்றுலாத் துறையும் மாநில அதிகாரிகளும் இணைந்து படகு சவாரி, தண்ணீர் சைக்கில் மற்றும் பனிப்பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் படகை கொண்டு சவாரி போன்ற வசதிகளை இந்த ஏரியில் உண்டாக்கியுள்ளன. ஏரியின் காட்சி தெரியும்படி அமைந்துள்ள ஆர்சிட் தங்கும் விடுதியில் தங்குவது இன்னும் சிறந்ததாக விளங்கும்.
இந்த ஏரியின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் இயற்கை அழகு கண்ணை பறிக்கும் வண்ணம் இருப்பதால் உள்ளூர் மக்கள் இடையேயும் இவ்விடம் புகழ் பெற்றுள்ளது. உமியம் ஏரி ஷில்லாங்கிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஷில்லாங்கிலிருந்து டூரிஸ்ட் வாகனம் அல்லது உள்ளூர் டாக்சி மூலமாக இங்கு சுலபமாக வரலாம்.



Click it and Unblock the Notifications