சந்த்ரஷீலா எனும் இந்த ரம்மியமான சுற்றுலாத்தலம் கடல் மட்டத்திலிருந்து 4000 மீ உயரத்தில் கர்வால் இமயமலைத்தொடர்களில் அமைந்துள்ளது.
இந்த இடத்திலிருந்து அருகிலுள்ள ஏரிகள், பசும் புல்வெளிகள் மற்றும் நந்ததேவி, திரிசூல், கேதார், பண்டார்புஞ்ச், சௌகாம்பா ஆகிய சிகரங்கள் போன்றவற்றை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
ராவணனை வென்ற பிறகு இந்த ஸ்தலத்தில்தான் ராமர் தியானத்தில் ஈடுபட்டதாக புராணிகம் கூறுகிறது. சந்திரக்கடவுளும் இந்த இடத்தில் தவம் செய்ததாக சொல்லப்படுகிறது.
பாறையேற்றம், பனிச்சறுக்கு மற்றும் மலையேற்றம் போன்ற சாகச பொழுது போக்கு அம்சங்களில் இப்பகுதியில் பயணிகள் ஈடுபடலாம். இப்பகுதியில் சொப்டா எனும் இடத்தில் மலையேற்றப்பாதை 5 கி.மீ நீளத்துக்கு துங்நாத் எனும் இடம் வரை செல்கிறது.
இந்த பாதை செங்குத்தாக இருப்பதால் கடுமையானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குளிர்காலத்தில் இப்பாதை மூடப்படும்போது பயணிகள் மற்றொரு பாதையான தேவ்ரியா தால் – துக்கல்பிட்டா – துங்க்நாத் –சந்திரஷீலா பாதையில் பயணிக்கலாம்.



Click it and Unblock the Notifications