சஞ்சி ஸ்துபாவின் 4 நுழைவாயில்களின் உச்சியில் சிங்கங்களின் 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்துபாவைக் கட்டத் திட்டமிடும் போது அந்த திட்டத்தில் இந்த நுழைவாயில்கள் சேர்க்கப்படவில்லை.
ஆனால் ஸ்துபாவைக் கட்டத் தொடங்கியவுடன் நுழைவாயில்களையும் சேர்த்துக் கொண்டனர். இந்த 4 நுழைவாயில்களும் ஸ்துபாவிற்கு அழகு சேர்க்கின்றன.
ஒவ்வொரு நுழைவாயிலும் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக இருக்கின்றது. இந்த 4 நான்கு நுழைவாயில்களும் கிமு முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.
தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் நுழைவாயில் மிக முக்கிய வாயிலாகக் கருதப்படுகிறது. இந்த வாயில்தான் முதலில் கட்டப்பட்டது. அதற்கு பின்பு வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் ஏற்படுத்தப்பட்டன.
தெற்கு நுழைவாயிலில் இருக்கும் கதவுகளில் கௌதம புத்தரின் பிறப்புக் காட்சிகளும், அசோகரின் வாழ்க்கைக் குறிப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளன.