புத்த சமய பண்பாட்டில், புத்த விகாரா, மிகவும் முக்கியமான மையமாகக் கருதப்படுகிறது. பொதுவாக புத்த துறவிகள் இந்த விகாராவில் தங்கி இருப்பர். இந்த புத்த விகாராவில் மர வேலைப்பாடுகளைப் பார்க்க முடியாது. அதோடு இந்த விகாராவில் புத்த துறவிகள் குழுவாக இணைந்து பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருப்பர்.
இந்த புத்த விகாரா, சஞ்சியிலிருந்து சில கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகவும் இந்த விகாரா கருதப்படுகிறது.
இந்த விகாராவில் சத்தாரா ஸ்துபாவின் எச்சங்களும் இருக்கின்றன. மேலும் இந்த விகாராவின் ஒரு பகுதியில் பண்டைய காலப் பொருள்களும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக புத்த விகாராக்களில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் காணப்படும். குறிப்பாக விகாராக்களில் மிகச் சிறிய அறைகள் இருக்கும். இந்த அறைகளின் கதவுகளில் இரண்டு அடுக்குகள் கொண்ட படுக்கைகள் இருப்பதோடு, இந்த படுக்கைகளில் புத்த துறவிகள் உறக்கம் கொள்வர்.
புத்த சமய பாரம்பரியத்தை தெரிந்து கொள்ளும் வகையில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த புத்த விகாராவிற்கு வந்து செல்கின்றனர்.