குஜராத்தின் மிக அடர்ந்த காட்டுப்பகுதியாக விலங்கும் பூர்ணா வனவிலங்கு சரணாலயம் 160 கிலோமீட்டர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது. சாபுதாராவின் அழகிய இயற்கைப் பூங்கக்களில் ஒன்றாகும் இது.
அடர்ந்த மூங்கில் புதர்கள் மண்டியுள்ள அடர்த்தியான வனப்பிரதேசம். இக்காட்டுப்பகுதியின் முக்கிய கிராமமான மஹால் இச்சரணாலயத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தென் குஜராத்தில், பூர்ணா சரணாலயமும், வன்ஸ்தா தேசியப் பூங்காவும் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாகும்.
இந்த சரணாலயத்தைப் பார்வையிடவும் முன்னனுமதி பெறப்படவேண்டும். யானை, காண்டாமிருகம், கரடிகள், காட்டெருமைகள், போன்ற வனவிலங்குகள் இக்காட்டில் முன்பு வசித்தனவென்று சொல்லப்படுகிறது. தற்போது சுமார் 700 வகையான தாவர வகைகள் இக்காட்டில் உள்ளன.



Click it and Unblock the Notifications