புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர் ரால்ஃப் வால்டோ எமர்சனின் புகழ்பெற்ற வாசகங்கள்" பூவுலகம் பூக்கள் மூலம் புன்னகைக்கிறது" சாபுதாராவிலுள்ல ரோஜா தோட்டத்திற்கு வாருங்கள்.
இங்குள்ள மலர்களைப் பார்த்தால், எமர்சனின் மேற்படி அழ்கிய கூற்றுகள் உண்மை என்று நம்புவீர்கள். சாபுதாராவிலுள்ள அழகிய தோட்டங்கள் மனதை கவர்வதோடு, மனதிலுள்ள பாரங்களை இறக்கிவிட்டு, லேசாக்கிவிடும் தன்மை கொண்டவை.
ரோகாத்தோட்டத்தில், பலவிதமான ரோஜா மலர்களை காணலாம். அருகாமையிலுள்ள மாடித்தோட்டத்தில், பலவிதமான மலர்ச்செடிகள் மாடிப்படிகளிலும், படிக்கட்டுகளிலும் அழகுற வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
லேக்வியூ தோட்டம் என்று ஒன்றும் இங்குள்ளது. இந்நகரத்தின் புகழ்பெற்ற சிற்றுலாத்தலம் இதுவாகும். பரபரப்பான மக்கள் அடர்ந்த நகரவாழ்க்கையிலிருந்து விடுபட்டு மனதைக் கொள்ளைகொள்ளும் மலர்களுடன் சற்றுநேரம் உறவாடிச் செல்ல இப்பூங்காக்கள் மிகவும் உகந்தவை.