ராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி மாவட்டத்தில் சவாய் மாதோபூர் நகரத்துக்கு அருகில் இந்த காய்லா தேவி கோயில் அமைந்துள்ளது. சவாய் மாதோபூர் நகருக்கு விஜயம் செய்யும் எல்லா சுற்றுலாப்பயணிகளும் இந்த காய்லா தேவி கோயிலின் வரலாற்று மற்றும் ஆன்மீக அம்சங்களுக்காக இங்கு விஜயம் செய்கின்றனர்.
சவாய் மாதோபூருக்கும் கரௌலிக்கும் இடையே இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள் மூலம் பயணிகள் இந்தக் காய்லா தேவி கோயிலை வந்தடையலாம்.
இந்தக் கோயில் ஜாதௌன் ராஜபுத்திர வம்சத்தாரின் குலதெய்வமாக அறியப்படுகிறது. அழகான வெண்பளிங்கு கற்கள் இந்தக் கோயிலின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயிலின் பிரதான மைய முற்றத்தில் கட்டம் கட்டமான தரை வடிவமைப்பு காட்சியளிக்கிறது.
இந்த கோயிலின் மற்றொரு விசேஷ அம்சம் பக்தர்கள் இங்கு ஒரு மூலையில் ஏராளமான சிவப்புக்கொடிகளை ஊன்றியிருப்பதாகும். ஒருகாலத்தில் இக்கோயிலின் தெய்வத்தை வழிபடுவதற்கு பக்தர்கள் கால்நடையாக வருவது வழக்கமாக இருந்துள்ளது. தற்போது, இந்தக்கோயிலில் தினமும் மாலையில் ‘ஜக்ரான்’ எனப்படும் ராத்திரி பூஜை நடத்தப்படுவது மற்றொரு விசேஷமான அம்சமாகும்.