சவாய் மாதோபூர் பகுதியில் கந்தர் தாலுக்காவில் இந்த கந்தர் கோட்டை அமைந்துள்ளது. இது சவாய் மாதோபூர் ஸ்தலத்தில் முக்கிய சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது.
இது சவாய் மாதோபூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ளது. ரன்தம்போர் தேசியப்பூங்காவிற்கு மிக அருகிலேயே இது காணப்படுகிறது. ஒரு செங்குத்தான மலையின் மீது அமைந்திருக்கும் இக்கோட்டை வாசலில் மூன்று பிரம்மாண்டமான கதவுகள் உள்ளன.
சிரமமான மற்றும் உயரமான இடத்தில் வீற்றிருப்பதால் எதிரிகள் இந்த கோட்டையை சுலபமாக வெல்லமுடியாத அளவுக்கு தனித்தன்மையை இது கொண்டுள்ளது. கந்தார் கோட்டையை ஆண்ட மன்னர்களில் ஒருவர் தான் போரிட்ட ஒவ்வொரு போரிலும் வெற்றிவாகை சூடியிருப்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும்.
இக்கோட்டையை ஆண்ட வம்சங்களில் மேவார் சிசோடியா வம்சம் குறிப்பிடத்தக்கதாக அறியப்படுகிறது. இவர்கள் பின்னாளில் முகலாயர்களால் வெல்லப்பட்டுள்ளனர். இக்கோட்டையின் உள்ளே எழு கோயில்கள் அமைந்துள்ளன.
ஹனுமான் கோயில், சதுர்புஜா கோயில், ராணி கோயில், கோபிந்த் தேவ்ஜி கோயில், ஜகத்பால்ஜி கோயில் மற்றும் ஜயந்தி மாதா கோயில் என்பவையே அவை. இவை தவிர பல நீர்நிலைகளும் இந்த கோட்டை வளாகத்தில் காணப்படுகின்றன. இரண்டு நீர்த்தேக்கம் மற்றும் ஏழு குளங்கள் இவற்றில் அடங்குகின்றன.