ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கியமான ஜைன திருத்தலங்களில் இந்த ஸ்ரீ மஹாவீர்ஜி கோயிலும் ஒன்று. இது சவாய் மாதோபூருக்கு அருகிலுள்ள சந்தன்பூர் எனும் சிறிய கிராமத்தில் கம்பீர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மணற்பாறைக்கல்லால் ஆன மஹாவீரர் பஹவானின் திரு உருவச்சிலை பத்மாசன கோலத்தில் இக்கோயிலின் விசேஷ அம்சமாக காட்சியளிக்கிறது. புஷ்ப தந்தா, ஷாந்திநாதர் மற்றும் ஆதிநாதர் ஆகியோரின் சிலைகளையும் இக்கோயிலில் பார்க்கலாம்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படும் வருடாந்திர உற்சவங்களின்போது இக்கோயிலுக்கு விஜயம் செய்வது நல்லது. இந்த திருவிழாக்காலங்களில் மஹாவீரர் விக்கிரகம் கம்பீர் ஆற்றின் புனித நீரில் திருமுழுக்காட்டு செய்யப்படுவது மற்றொரு விசேஷமாகும்.
நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஜைன யாத்ரீக பக்தர்கள் இத்திருவிழாக்காலங்களில் தீர்த்தங்கரர்களின் அருளைப்பெறுவதற்கு ஸ்ரீ மஹாவீர்ஜி கோயிலுக்கு வருகை தருகின்றனர்.