சாவந்த்வாடி வரும் பயணிகள் ஏதேனும் கைவினைப் பொருட்களை வாங்காமல் ஊர் திரும்பினால் இந்த நகரத்துக்கு சுற்றுலா வந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே ஷாப்பிங் செல்ல விரும்பும் பயணிகள் சாவந்த்வாடி சந்தைக்கு செவ்வாய் கிழமைகளில் சென்று தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவது சிறப்பாக இருக்கும். மேலும், இங்கு முந்திரி லட்டு, பலாப்பழத்தில் செய்த பதார்த்தங்கள் போன்றவை மிகவும் பிரசித்தம்.