சிப்சாகர் நகரில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வது சிப்சாகர் அல்லது போர்புக்குரி ஏரி. இந்த ஏரியின் மூலமாகவே இந்த நகருக்கு சிப்சாகர் என்று பெயர் வந்ததாகக் கூறுவர்.
சிப்சாகர் ஏரி என்பதற்கு சிவபெருமானின் பெருங்கடல் என்று பொருள். சுமார் 257 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, நகரத்தின் உயரத்தை விட அதிகமாக இருக்கிறது.
மேலும், சிவ டால், விஷ்ணு டால் மற்றும் தேவி டால் என்ற மூன்று முக்கிய கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. 1734 ஆம் ஆண்டு, அசாமை ஆட்சி புரிந்த மன்னர் சுவர்கதியோ சிப சிங்கரின் மனைவி ராணி குவோரி அம்பிகா, இந்தக் கோவில்களைக் கட்டினார்.
ஏரியைச் சுற்றிலும், மணலால் செய்யப்பட்ட பொருட்கள் காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து ஏரியின் அழகை ரசிக்கின்றனர். இங்கிருக்கும் கோவில்களை தரிசிக்கவும் பலர் சிப்சாகருக்கு வருகின்றனர்.