சிரவணபெலகொலாவில் உள்ள சந்திரகிரி மலையில் அமைந்துள்ள இந்த சந்திரகிரி கோயிலையும் பயணிகள் தரிசிப்பது அவசியம். ஆச்சார்ய நேமிச்சந்த்ர சித்தாந்த சக்ரவர்த்தியின் சீடராகிய சாமுண்டராயா என்பவரால் இந்த பிரபலமான ஜைன திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
‘இருவே பிரம்மதேவா’ கோயில் என்றும் அழைக்கப்படுகிற இந்த கோயில் சந்திரகிரி மலையில் அமைந்துள்ள இருபது ஜைன கோயில்களில் ஒன்றாகும்.
10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுக்குறிப்புகள் இந்தக் கோயிலில் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுக் குறிப்புகளின் மூலம் கன்னட மொழியின் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்த தகவல்களையும் ஆய்வாளர்களால் அறிந்து கொள்ள முடிகிறது.
சந்திரகிரி கோயில் அக்காலத்திய பாரம்பரிய கோயில் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த கோயிலின் கட்டுமானத்துக்கு ஒழுங்கான பளிங்கு (கிரானைட்) கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த கோயில் ஸ்தலத்தை சுற்றிலும் பசுமையான இயற்கைக்காட்சிகளும் கண்களுக்கு விருந்தாய் காட்சியளிக்கின்றன.