18-ம் நூற்றாண்டில், ஆப்கானிய கவர்னராக இருந்த அட்டா முகம்மது கான் என்பவரால் தால் ஏரியின் மேற்கு கரையில் ஹரி பர்பத் கோட்டை கட்டப்பட்டுள்ளது. 1590-ம் ஆண்டில் முகலாயப் பேரரசரான அக்பரால் இந்த கோட்டையின் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது.
ஹரி பர்பத் கோட்டை கட்டப்பட்டுள்ள இடம், முந்தைய காலத்தில் பெரிய ஏரியாகவும், ஜலோபாவா என்ற கொடூரமான பேய் வாழ்ந்த இடமாகவும் இருந்ததாக புராணக்கதைகளில் சொல்லப்படுகிறது.
இதனால் பயப்பட்ட இப்பகுதி மக்கள், இந்துக்ளின் போர்க்கடவுள் மற்றும் நீண்ட ஆயுளை வழங்கும் கடவுளான சதி என்ற பெண் தெய்வத்தை நோக்கி வேண்டினார்கள். மக்கள் கோரிக்கையைக் கேட்டு மனமிரங்கிய இந்த பெண் தெய்வம், பறவையாக மாறி பறந்து சென்று ஒரு சிறிய கூழாங்கல்லை ஜலோபாவா பேயின் மீது போட்டது.
வானத்திலிருந்து விழுந்து கொண்டிருந்த அந்த சிறய கூழாங்கல், பூமியை நெருங்க நெருங்க மிகப்பெரியதாக வளர்ந்து, அந்த பேயின் தலையின் மீது விழுந்து கொன்றது.
தற்போது ஜம்மு காஷ்மீர் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டைக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும். இந்த கோட்டைக்கு அருகில் உள்ள பிற பார்வையிடங்களாக லால் மன்டி சதுக்கம் மற்றும் சரிகா தேவி கோவில் ஆகியவை உள்ளன.



Click it and Unblock the Notifications