ஸ்ரீ நகரிலிருந்து 30 கிமீ தொலைவில் ஜீலம் பள்ளத்தாக்கில் மனாஸ்பல் ஏரி அமைந்துள்ளது. மானசரோவர் ஏரியின் பெயரிலிருந்து தனது பெயரை பெற்றுள்ள இந்த ஏரியின் கரைகளில் கொன்டாபல், க்ராட்பல் மற்றும் ஜரோக்பல் ஆகிய மூன்று கிராமங்கள் அமைந்துள்ளன.
43 அடி ஆழமிருக்கும் இந்த ஏரி காஷ்மீரிலேயே மிகவும் ஆழமான ஏரியாகும். இந்த ஏரியின் அழகுக்கு மெருகூட்டி வரும் தாமரை மலர்களுக்காக மிகவும் புகழ் பெற்ற ஏரியாக இது உள்ளது.
'காஷ்மீரில் உள்ள ஏரிகளிலேயே மிகச்சிறந்த இரத்தினம்' என்று இந்த ஏரி பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் இங்கே பனிச்சறுக்கு விளையாட மிகவும் ஏற்ற மாதங்களாகும். கரோகா என்ற முகலாய தோட்டமும் இந்த ஏரிக்கருகில் உள்ளது. மேலும், இந்த ஏரி பறவைகளை கவனிக்கவும் மிகச்சிறந்த தலமாக உள்ளது.



Click it and Unblock the Notifications