சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அமைந்து இருக்கிறது. எனவே சாலை வழியாக பயணம் செய்வது மிக எளிது. அரசாங்க பேருந்து கட்டணம் இருபது ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கப்பெறுகின்றது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பேருந்துகளும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்கின்றன. பயணத்திற்காக இருசக்கர வாகனங்களையும் வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். பயண நேரம் ஏறத்தாழ ஒரு மணி நேரம்.