ஒரு பெரிய சிவலிங்கம் அமைந்துள்ள இந்த மருளேஷ்வர் கோயிலும் தலக்காடு ஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் தவறாது பார்க்க வேண்டிய அம்சமாகும். கங்க மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலில் உள்ள பெரிய சிவலிங்கம் பிரம்மாவால் அனுக்கிரகிக்கப்பட்டதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
பஞ்சலிங்க தரிசனத்தின் போது பக்தர்கள் விஜயம் செய்யும் ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த மருளேஷ்வரர் கோயிலில் திருமால், வீரபத்ரர், மகேஷ்வரர், சண்முகர், அம்பிகை, நவகிரகங்கள், கணபதி மற்றும் சூரியா போன்றோரின் சிலைகளை பக்தர்கள் பார்க்கலாம். விஷ்ணுவுக்கான கோயிலான கீர்த்தி நாராயணா கோயிலுக்கு அருகிலேயே இந்த கோயில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications