தா பர்பாதியா கோவில் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுள்ள பாரம்பரிய இடமாக விளங்குகிறது. அசாமின் பழமையான சிலை மாதிரி என்பதால் இவ்விடம் மாநில அரசால் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. 1897ல் அசாம் முழுதும் ஏற்பட்ட பெரிய பூகம்பத்தில் இக்கோவிலின் பெரும்பாலான இடங்கள் அழிந்துவிட்டன.
இங்கிருக்கும் சுவர் செதுக்கல்கள் குப்தர் காலத்தியவைகளுடன் ஒத்துப் போவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கங்கை, யமுனா ஆகிய கடவுள்களின் சிலைகள் இக்கோவிலின் வாசலில் உள்ளன.
நுண்ணிய தழைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இச்சிலைகள் தங்கள் கையில் மாலைகளை ஏந்திய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. கதவின் நிலை சிவலிங்கத்தை தாங்கிய கல் குழிக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.
தா பர்பாதியா கோவிலுக்கு பயணப்படுவது அக்காலத்திய கட்டிடக்கலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாய் இருக்கிறது.