தேஜ்பூர் செல்லும் யாரும் படும் புகுரியை தவறவிட முடியாது. நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த ஏரியின் நடுவில் ஒரு தீவும் அமைந்துள்ளது. கோடைகாலங்களில் ஏரிக்கரைகளில் நடப்பதும் தீவுக்கு நடுவே நின்று இளைப்பாறுவதும் சிறந்த அனுபவமாக இருக்கிறது. \
படகு சவாரியும், பொம்மை ரயில் பயணமும் இங்கு முக்கிய ஈர்ப்புகளாக விளங்குகின்றன. இசையும் கூடிய நீரூற்றும் ஒவ்வொரு மாலையிலும் இங்கு இசைக்கப்படுகிறது. சில்லென்ற தென்றலும், இசையும் இங்கு ரம்மியமான சூழலை ஏற்படுத்துகின்றன. அசாமிய மொழியில் தாமரைக் குளம் என்ற அர்த்தத்தில் இவ்விடம் படும் புகுரி என்றழைக்கப்படுகிறது.
படும் புகுரியை எளிதாக அடையலாம். மாநில போக்குவரத்து கழகத்திற்கு அருகிலேயே இவ்விடம் அமைந்துள்ளது. ஊருக்குள் நுழையும் யாரும் இவ்விடத்தை தவறவிட முடியாது.



Click it and Unblock the Notifications