செயிண்ட் ஜேம்ஸ் சர்ச் என்று அழைக்கப்படும் இந்த கிறித்துவ தேவாலயம் தானே தலைமைத் தபால் நிலையம் மற்றும் சிறைக்குளத்துக்கு அருகில் உள்ளது. 200 வருடங்கள் பழமையை உடைய இது 1825ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியை மையமாக கொன்டு இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் நீள அகலங்கள் முறையே 90 அடி மற்றும் 60 அடியாக அமைந்துள்ளன.
இதன் பிரதான வாசலை 16 அடி உயரமுள்ள 6 தூண்கள் அலங்கரிக்கின்றன. இதன் முகப்பு பகுதி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு 350 சதுர அடி பரப்பளவில் காணப்படுகிறது. 24 அடி உயரம் கொண்ட இது கிரேக்கக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தேவாலயத்தின் மையப்பகுதி 24 அடி உயரமும் 55 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டு மரத்தால் ஆன கூரைப்பகுதியால் உருவாக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தை ஒட்டி ஒரு கல்லறைப்பகுதியும் காணப்படுகிறது.
சுதந்திரத்துக்கு முன்னர் இந்த தேவாலயம் ஆங்கிலேய அரசால் நிர்வகிக்கப்பட்டது. இது தற்சமயம் ‘பாம்பே டயோசிஸன் ட்ரஸ்ட்’ சங்கத்தின் பொறுப்பில் உள்ளது.



Click it and Unblock the Notifications