தான்சா வனவிலங்கு சரணாலயத்துக்க்கு அருகில் இந்த இயற்கை எழில் கொஞ்சும் தான்சா ஏரி அமைந்துள்ளது. சலனமற்ற அமைதியுடன் திகழும் இந்த நீர்த்தேக்கம் மும்பை பெருநகரத்துக்கு நீரை வழங்கும் நீர் ஆதாரம் என்பது குறிப்பிட த்தக்கது.
இந்த ஏரி 3 மில்லியன் காலன்கள் நீரை தேக்கக்கூடிய அளவுக்கு கொள்ளளவைக் கொண்டுள்ளது. தினமும் இரண்டாயிரம் காலன்கள் நீர் இங்கிருந்து மும்பை நகருக்கு குழாய் இணைப்புகள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது.
பிரமிக்க வைக்கும் அளவுக்கு பிரமாண்டமான நீர்ப்பரப்பாக காட்சியளிக்கும் இந்த நீர்த்தேக்கம் ஓய்வெடுப்பதற்கும் ஒரு நீண்ட உலா செல்வதற்கும் ஏற்ற இயற்கைப்பிரதேசமாகும். இந்த ஏரியின் இயற்கை எழில் காரணமாக சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ள ஒரு ஸ்தலமாக இது விளங்குகிறது.
தான்சா ஏரிக்கருகில் அமைந்துள்ள மாஹுளி கோட்டை கட்டிடக்கலை ஆர்வலர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வரலாற்று ஸ்தலமாகும். தானே நகரத்திலிருந்து எளிதாக செல்லும்படி அமைந்துள்ள இந்த ஏரி மாஹுளி கிராமத்திலிருந்து 15 நிமிட பிரயாண தூரத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications