தானே பகுதியில் உள்ள 23 ஏரிகளில் இந்த உப்வண் ஏரி இயற்கை ரசிகர்கள் மற்றும் தனிமையில் பொழுது போக்க விரும்பும் காதலர்கள் விரும்பும் இடமாக உள்ளது. இளைஞர்கள் தம் நண்பர்களுடன் பொழுது போக்குவதையும் இங்கு அதிகமாக காணலாம்.
சுற்றியுள்ள இயற்கைக்காட்சிகளை வசதியாக அமர்ந்து ரசிப்பதற்கேற்ற இருக்கைகள் இங்கு அதிக அளவில் உள்ளன. தானே மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிதாக இந்த உப்வண் ஏரி கருதப்படுகிறது.