பாண்டிய மன்னன் நான்காம் வீரபாண்டியனால் 14-ஆம் நூற்றாண்டில் கௌமாரியம்மன் கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் கௌமாரியம்மன் மற்றும் கண்ணீஸ்வரமுடியார் கடவுளை வணங்கிய பின்னர் வீரபாண்டியன் தன்னுடைய இழந்த பார்வையை மீண்டும் பெற்றதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.
இங்கு வீற்றிருக்கும் புனிதமான பெண் கடவுளான கௌமாரியம்மன் தன்னை நோக்கி வேண்டும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவராகவும், அவர்களின் தீராத நோய்கள் மற்றும் வலிகளை தீர்ப்பவராகவும் நம்பப்படுகிறார்.
தமிழ் மாதமான சித்திரையில், அதாவது ஏப்ரல்-மே மாதங்களில் 8 நாட்களுக்கு இந்த கோயிலின் முக்கியமான திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தேனியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள வீரபாண்டி என்ற கிராமத்தில், முல்லையாற்றின் கரையில், இந்த கௌமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.