மிஜோராமின் மிக உயரமாக நீர்வீழ்ச்சியான வன்டாங், இந்தியாவில் 13வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இரண்டு அடுக்குகளாய் விழுகும் இந்நீர்வீழ்ச்சி 229மீ உயரத்தில் இருந்து விழுகிறது. செர்சிப்பில் இருந்து 30கிமீ தொலைவிலும், அய்ஜாவ்லில் இருந்து 137கிமீ தொலைவிலும் உள்ளது.
பார்ப்பதற்கு மிக அழகாய்த் தோன்றும் இந்நீர்வீழ்ச்சி வன்வா நதியில் அமைந்துள்ளது. வன்டாங் என்ற சிறந்த நீச்சல் வீரரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒருமுறை அவரது சாகசங்களில் போது ஒரு பெரிய மரக்கட்டை அவர் மீது விழுந்ததால் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காட்சிக்கோணத்திற்காகவே சுற்றுலாத்துறை ஒரு கோபுரத்தை அமைத்துள்ளது. வாடகைக்கார் மூலம் பயணிகள் இந்நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.



Click it and Unblock the Notifications