மிஜோராம் மாநிலத்தில் உள்ள தெஞ்ஜாவ்ல் ஒவ்வொரு சுற்றுலா விரும்பியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகிய கிராமமாகும். செர்சிப் மாவட்டத்தில் நிர்வாகத்தின் கீழ வரும் இவ்வூர் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக இருந்தது. மிஜோராம் தலைநகர் அய்ஜாவ்லில் இருந்து 43கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.
1961வரை மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அடர்ந்த காடாக இருந்த இப்பகுதியை 1961 சமப்படுத்தி ஊரக உருவாக்கினார்கள். 1963ல் பெங்குவாயோ சைலோ இவ்வுரை உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. அப்போதிருந்து கைத்தறித் துறையில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
வழமைக்கு மாறான, வித்தியாசமான சுற்றுலாவை விரும்புகிறவர்கள் தெஞ்ஜாவ்ல் செல்லலாம். பூக்கள் மற்றும் விலங்குகளுடன் இருக்கும் இவ்வூர் சிறியதாக இருந்தாலும் சில மதிமயக்கும் சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளது.
வன்டாவ்ங்க் நீர்வீழ்ச்சி என்ற மிஜோராமின் உயரமான நீர்வீழ்ச்சி, தெஞ்ஜாவ்ல் தேசிய மான்கள் பூங்கா, பாம்பிற்கும் ஒரு பெண்ணிற்கும் இடையேயான காதலுக்கு புகழ்பெற்ற சாவ்ங்ச்சி குகை, துவாலுங்கி த்லான் என்ற இடத்தில் தன் கணவனுக்கு அருகில் தன்னைத்தானே புதைத்துக் கொண்ட பெண்ணின் கல்லறை இருப்பதாக நம்புகிறார்கள்.
தெஞ்ஜாவ்ல் அடைய வழி
அய்ஜாவ்லில் இருந்து 43கிமீ தொலைவில் இருக்கும் இவ்வூருக்கு பேருந்து வசதிகளும், தனியார் வாகன வசதியும் உண்டு. அய்ஜாவ்ல் விமானநிலையத்தில் இருந்ந்து கார் மூலமும் பயணிக்கலாம்.
தெஞ்ஜாவ்ல் வானிலை
வருடம்முழுதும் இங்கு மிதமான வானிலையே நிலவுகிறது. வெயில் காலங்களில் மிதமான வெப்பமும், மழைக்காலத்தில் அடர் மழையும், குளிர்காலத்தில் இதமான குளிரும் நிலவுவதால் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம்.