திருக்கருக்காவூர், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமமாகும். இந்த அமைதியான கிராமம், தஞ்சாவூர் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
திருக்கருக்காவூர், சிறு கிராமமாக இருப்பினும், இங்கு புகழ்பெற்ற “அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில் உள்ளதால், இது இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு தலமாக விளங்குகிறது.
வருடந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். “கர்ப்பரக்ஷாம்பிகை கோயில்” என்றும் அழைக்கப்படும் இக்கோயில், பார்வதி தேவியின் அவதாரமான, கர்ப்பரக்ஷாம்பிகைத் தாயாருக்காகவே அமையப்பெற்ற ஒரு கோயிலாகும்.
குழந்தைப் பேறு கிடைக்க விரும்பும் தம்பதிகள் இத்தாயாரை வந்து வழிபட்டால் கட்டாயமாக அப்பேறு கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம்.
திருக்கருக்காவூர், பார்வதி தேவியால் மட்டுமல்லாது பூமாதேவியாலும் ஆசீர்வதிக்கப்பட்டு, பசுமையான சுற்றுச்சூழல் கொண்ட ஒரு அழகான இடமாகும். இவ்வூரின் அழகு, நகர வாழ்க்கையின் பரபரப்புகளிலிருந்து விடுபட்டு, அமைதியான சூழலில் தங்கிச் செல்ல விரும்புபவர்களை கவர்ந்திழுக்கக்கூடியதாக உள்ளது.
திருக்கருக்காவூரை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திலிருந்து, வான் வழியாகவோ, ரயில் மூலமாகவோ அல்லது சாலை வழியாகவோ எளிதில் அடையலாம்.
இவ்வூரின் வானிலை தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தின் வானிலை போலவே காணப்படுகிறது. கோடைகாலத்தில் இங்கு வானிலை மிக வெப்பமாக இருக்கும். வானிலை குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் இருக்கும் குளிர்கால மாதங்களே இங்கு செல்வதற்கு உகந்த காலகட்டமாகும்.



Click it and Unblock the Notifications