திருகண்ணபுரத்திலுள்ள நீலமேகப்பெருமாள் கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது சிவபெருமானுக்குரிய வழிபாட்டுத்தலமாகும். இங்கு, சிவன் “நீலமேகப்பெருமாள்” என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.
இக்கோயில் சோழர்களின் பிரபலமான கோயில் கட்டுமானக் கலைக்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. திருவாரூரின் மிக முக்கிய கோயில்களுள் ஒன்றான இக்கோயிலுக்கு, வருடந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இங்கு மூலஸ்தானம், நிலத்தில் இருந்து 100 அடி மேலெழுந்த வண்ணம் கோபுர வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகம், பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயில் மண்டபம், நம் அந்தராத்மாவின் பயங்களையும், அவநம்பிக்கைகளையும் போக்கும் விதமாகவும், தியானம் செய்வதற்கு வாகாகவும் அமையப்பெற்றுள்ளது.
ஏராளமான சந்நிதிகள், மற்ற பல தெய்வங்களையும் வழிபடும் வண்ணம், இக்கோயிலில் காணப்படுகின்றன. இவற்றுள் கணபதிக்கும், பார்வதி தேவிக்கும் அமைக்கப்பட்டுள்ள சந்நிதிகளும் அடங்கும்.