கொற்கை திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி இடையே அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் கொற்கை குளமானது அமைந்துள்ளது. பாண்டிய பரம்பரையின் ஆட்சியின் போது கொற்கை கிராமமானது மிகவும் பிரபலமான துறைமுகமாக இருந்தது.
கொற்கையில் பழங்கால கோயிலான வெற்றிவேளம்மன் கோயிலும் அமைந்துள்ளது. 1838ம் ஆண்டு படையெடுப்பின் போது கி.மு மூன்றாம் நூற்றாண்டு மற்றும் கி.பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கலை வடிவங்கள் இக்கிராமத்தில் இருந்து கொள்ளை போயின.
கொற்கையை பற்றின குறிப்பை பழங்கால மேற்கத்திய மற்றும் சங்க கால நூல்களில் காண முடிகிறது. பிரபல கிரேக்க புவியியல் வல்லுநர் தாலமியால் இந்த இடமானது கோல்கை என்று குறிப்படப்படுகிறது. அதாவது முத்து குளித்தலின் மையமாக கருதப்பட்டது.



Click it and Unblock the Notifications