செண்பகவல்லி அம்மன் கோவில் கோயில்பட்டியின் உயரமான இடமான கோவில்மேட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் பூவன நாதர் சுவாமி மற்றும் செண்பகவல்லி அம்மனுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கோயிலில் செண்பகவல்லியின் பிரபலமான 7 அடி உயர சிலை ஒன்றும் காணப்படுகிறது. அம்பாள் ஆடி பூரணம் திருவிழா மற்றும் சித்திரை தீர்த்த திருவிழாக்கள் இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள், இக்காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர்.
இக்கோயிலின் ஆண் தெய்வம் அருள்மிகு பூவன நாதர் சுவாமியை அகஸ்திய முனிவர் பொதிகைக்கு செல்லும் வழியில் வழிப்பட்டு சென்றதாக வரலாறு கூறுகிறது.



Click it and Unblock the Notifications