கொண்ஜம் என்ற இடம் தௌபல் மாநகராட்சியில் உள்ள புகழ் பெற்ற இடங்களில் ஒன்றாகும். நாட்டின் சுதந்திரத்துக்காக மணிப்பூர் மக்கள் வெள்ளையர்களுக்கு எதிராக கடைசி போரை நடத்தியது இந்த இடத்தில் தான்.
மணிப்பூர் மக்கள் வெள்ளைய முதன்மை ஆணையரையும் அவரின் கட்சி உறுப்பினர்களையும் கொலை செய்த பின் 1891 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மூண்டது இந்த போர்.
வெள்ளையர்களிடம் ஒப்பிடுகையில் மணிப்பூர் மக்களிடம் போதிய ஆள் பலமோ ஆயுதோ பலமோ இருக்கவில்லை. இருப்பினும் தங்களது சக்தியை பயன்படுத்தி போரில் முழு வீச்சுடன் ஈடுபட்டனர்.
இந்த போரில் மணிப்பூர் மக்கள் தோற்றுப் போனாலும், மேஜர் ஜெனரல் பௌனா ப்ரஜாபஷி தலைமையில் போரிட்ட அனைவரின் வெறித்தனமான மனத் தைரியமும் மறக்க முடியாதவை.
கொண்ஜம், தௌபலிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் இம்பாலிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. போரில் பங்கு பெற்ற வீரர்களின் நினைவாக அங்குள்ள ஒரு குன்றின் மேல் ஒரு சின்ன போர் நினைவகம் நிறுவப்பட்டிருக்கிறது.
இந்த போரின் நினைவாக ஒவ்வொரு வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மணிப்பூரில் மாநில விடுமுறை விடப்பட்டுள்ளது. கொண்ஜம், தேசிய நெடுஞ்சாலையுடன் தொடர்பில் இருப்பதுடன் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி ஒன்றும் இங்கு உள்ளது.