நஸ்ருள் க்ரான்த்ஹர் என்பது உதய்பூரில் உள்ள ஒரு பிரபலமான தேசிய நூலகம் ஆகும். இது பிரபலமான வங்காள கவிஞர், காஸி நஸ்ருள் இஸ்லாம் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த தேசிய நூலகத்தில் அறிவியல் மற்றும் அறிவியல் இல்லாத பல புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
நஸ்ருள் க்ரான்த்ஹர் மானிக்யா வம்சத்தின் கலாச்சார செழுமையை பறைசாற்றிக் கொண்டிருப்பதுடன் திரிபுரா மக்களுக்கு தேவைப்படும் மிக முக்கியமான புத்தகங்கள் மற்றும் இலக்கியங்களையும் சேமித்து வைத்துள்ளது.
இன்று கூட வெகுதொலைவில் உள்ள தலைநகரான அகர்தலாவில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குறிப்பாக மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் இந்த நூலகத்திற்கு அடிக்கடி வருகை புரிகின்றனர்.
ஒரு இடத்தில் நிலவும் உள்ளூர் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த நூலகம் ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆயிரக்கணக்கான புத்தகங்களை சேமித்து வைத்திருக்கும் இந்த நூலகம் ஒரு தனித்தன்மை வாய்ந்ததாகும்.
இது புகழ்பெற்ற வங்காளக் கவிஞரான காஸி நஸ்ருள் இஸ்லாம் பெயரால் அழைக்கப்படுவதால் இந்த நூலகத்தில் அவருடைய புத்தகங்களுக்காக ஒரு பகுதி அர்பணிக்கப்பட்டுள்ளது.