உங்களுக்கு டுயன்சாங் மாவட்டத்தின் புராணக்கதைகளை அறிந்து கொள்ளும் ஆர்வமிருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் லோங்ட்ரோக் ஆகும். லோங்ட்ரோக் என்ற வார்த்தைக்கு 'ஆறு கற்கள்' என்று பொருளாகும், ஏனெனில் இந்த ஆறு கற்கள் அல்லது கர்ப்பகிரகங்கள் உள்ள இடத்தில் தான் நாகா மக்கள் தங்களுடைய கடவுள்கள் பிற கற்களை உருவாக்கியதாகவும், அவை வேறு இடங்களுக்கு நகர்ந்த சென்று விட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.
இன்று இந்த கற்கள் 'டுயன்சாங்கின் வாழும் கற்கள்' என்று பிரபலமாக அழைக்கப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் ட்சோங்லியாங்டி மற்றும் சுங்லியாங்டி நாகரீக பொருட்களை உங்களால் காணமுடியும்.
டுயன்சாங் நகரத்திலிருந்து 57 கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் தான், மிகப்பெரிய நாகா பழங்குடியினரான ஆவோ இனத்தவர் பல பரம்பரைகளாக வசித்து வந்த இடமாக இருந்துள்ளது. இந்த இடத்தில் ஒட்டு மொத்த நாகா இனத்தவரும், ஒரே பெரிய குடும்பமாக வசித்து வந்ததன் அடையாளத்தை உங்களால் காண முடியும்.