துல்ஜாபவானி கோயிலின் பிரகாரப்பகுதியில் அமைந்துள்ளது இந்த கல்லோல தீர்த்தம் என்றழைக்கப்படும் இந்தக்குளம். சுமார் 40 அடி நீளம் மற்றும் 20 அடி அகலம் என்ற அளவில் அமைந்திருக்கும் இந்த குளத்தைச்சுற்றிலும் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மபஹவானின் வேண்டுகோளின்படி மூன்று முக்கிய புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் இந்த புனித தீர்த்தக்குளத்தில் வந்து சேர்ந்ததாய் ஐதீகமாய் நம்பப்படுகிறது.
அப்படி அந்த மூன்று ஆறுகளும் ஒன்று சேர்ந்தபோது ‘கோலாஹல்’ எனும்படியான ஒலி எழுந்ததாகவும் அதனாலேயே இந்த தீர்த்தக்குளம் கல்லோலா என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.இந்த குளத்திற்கு ஒரு விஜயம் செய்து இதில் மூழ்கி எழுந்தால் எல்லா பாவங்களும் கர்ம வினைகளும் தீரும் என்று நம்பப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் இந்த தீர்த்தக்குளத்திற்கு விஜயம் செய்து புனித நீராடுகின்றனர்.