உஜ்ஜைன்னில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்று தான் சின்தமன் கணேஷ் கோவில். விநாயகரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு இந்தக் கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
சின்தமன் என்ற பழமையான ஹிந்து சொல்லுக்கு 'மன அழுத்தத்தை நீக்குதல்' என்று பொருளாகும். இங்கு மன அழுத்தத்துடன் வரும் அனைத்து பக்தர்களுக்கும் விநாயகர் உடனடி நிவாரணம் தருவார் என்று மக்களால் நம்பப்படுகிறது.
இந்த கோவில் வளாகத்திற்கு மிக அருகில், பதேபூர் இரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ளது ஷிப்ரா நதி. இந்த கோவிலை வந்தடைய பல வசதிகள் உள்ளன. இங்கு தனியார் வாகனம், பேருந்து, ஆட்டோ மற்றும் இரயில்கள் மூலம் வரலாம்.
உஜ்ஜைன் இரயில் நிலையத்திலிருந்து இந்த கோவில் வெறும் 5 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் விநாயகர் ஒரு சுயம்பு வடிவம் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். விநாயகரின் இருபக்கத்திலும் ரித்தி மற்றும் சித்தி வீற்றிருப்பதை பார்க்கலாம்.