துர்காதாஸ் கி சத்ரி என்ற தனித்துவம் வாய்ந்த நினைவுச் சின்னம் கோவில் நகரமான உஜ்ஜைன்னில் உள்ளது. இந்த நினைவுச் சின்னம் ராஜபுதன வரலாற்றில் ஒரு பெரும்புள்ளியாக விளங்கிய வீர் துர்காதாஸ் என்பருக்காக கட்டப்பட்டது.
ஜஸ்வந்த் சிங் மகாராஜாவின் மறைவுக்கு பின் முகாலயர்களுடன் போரிட்டு, அவுரங்கசிப்பின் ஆசைக்கு எதிராக ஜோத்பூர் அரியணையில் முடி சூட்ட அஜித் சிங்கிற்கு உதவி புரிந்தார் வீர் துர்காதாஸ்.
இந்த வீரன் 1718-ஆம் ஆண்டு மறைந்தார். இறக்கும் முன் அவருடைய இறுதிச் சடங்கு ஷிப்ரா நதிக்கரையில் நடக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த நினைவுச் சின்னம் ராஜ்புட் கட்டடக்கலையை சார்ந்து இருக்கும். சுற்றுலாப் பயணிகளிடம் புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது இது.
வீர் துர்காதாசிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜோத்பூரை ஆண்டவர்களால் கட்டப்பட்டதாகும் இந்த நினைவுச் சின்னம். இந்த இடத்தை சுற்றி பச்சை பசுமையாய் இருப்பதால், இந்த நினைவுச் சின்னம் பார்ப்பதற்கு ஒரு சிறு நகையை போல் காட்சி அளிக்கும்.



Click it and Unblock the Notifications