மௌரியன் காலத்து பெருமைகளை இளைய சமுதாயனத்தினர் நினைவில் வைத்துக் கொள்ள, உஜ்ஜைன் நகரத்தில் எழுப்பட்டதே விக்ரம் கீர்த்தி மந்திர். ஸ்கிந்தியா ஓரியண்டல் ஆராய்ச்சி நிலையம், தொல்பொருள் அருங்காட்சியம், கலைக்கூடம் மற்றும் ஒரு அவைக்கூடத்தை கொண்டுள்ளது இந்த விக்ரம் கீர்த்தி மந்திர்.
விக்ரம் சகாப்தத்தின் 2000-வது ஆண்டை முன்னிட்டு, இந்த இடம் ஒரு பண்பாட்டு மையமாக நிறுவப்பட்டது. இங்குள்ள அருங்காட்சியத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிய வகை ஓவியங்கள், செப்பு தட்டுகள் மற்றும் உயிரினப்படிவங்களை காணலாம்.
ஆதி காலத்தில் வாழ்ந்த யானையின் பெரிய எலும்புக் கூட்டு தலை ஒன்று இங்குள்ளது. அதனை காணவே இங்கு கூட்டம் அலை மோதும். ஸ்கிந்தியா ஓரியண்டல் ஆராய்ச்சி நிலையத்தில் பதினெட்டாயிரத்துக்கு மேலான கையெழுத்துப்படிகள் உள்ளன.
இங்குள்ள அறிய வகை கையெழுத்துப்படிகள் பெர்சியன், அரேபிய மற்றும் இதர இந்திய மொழிகளில் காணப்படுகின்றன. விக்ரம் கீர்த்தி மந்திரிலுள்ள முக்கிய சுற்றுலாப் பகுதியாக பார்க்கப்படுகிறது இந்த ஆராய்ச்சி மையம்.