பழங்காலத்து நகரமான உஜ்ஜைன்னின் மிகச் சிறந்த கல்வி மையமாக விக்ரம் பல்கலைகழகம் திகழ்ந்து வருகிறது. விக்ரமாதித்யா அரசரின் நினைவால் இந்த பல்கலைகழகம் இந்தப் பெயரை பெற்றது.
1957-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பல்கலைகழகம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றாகும். பல்கலைகழக அதிகாரிகள் இங்கே பல வசதிகளை தந்துள்ளனர்.
இங்குள்ள மகாராஜா சிவாஜி ராவ் நூலகத்தில் 1645 Ph.D ஆய்வு கட்டுரைகள் உள்ளன. மற்றொரு குறிப்பிடத்தக்க பகுதி, 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பல்கலைகழகத்தின் அச்சகமாகும்.
இந்த வளாகம் செயற்கைக்கோளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்களை இணையதளத்தில் பார்க்க முடியும். இந்த பல்கலைகழகம் தனக்கென்று தனி பணித்துறை வைத்திருக்கிறது.
இது இங்குள்ள கட்டிடங்களை பராமரித்து புதிய கட்டுமானத்துக்கு திட்டம் தீட்ட உதவி புரியும். பல முக்கிய பிரபலங்கள் இங்கு பயின்றவர்கள் தான். அந்த பட்டியலில் பல விஞ்ஞானிகள், கல்வி அறிஞர்கள் மற்றும் முன்னாள் இந்திய முதன்மை நீதிபதி அடங்குவார்கள்.