டங்கன் பூங்கா, உக்ருள் மாவட்டத்தில் உள்ள பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். உக்ருள் மாவட்டத்தின் தலைமையகத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள `ஹுங்ரெய்' என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம் ஆகும்.
இது 1984-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள குழந்தைகள் பூங்கா பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது.
எனினும், பல ஆண்டுகளாக பராமரிப்பின்மை காரணமாக, பூங்காவின் நிலை பெரிய அளவில் மோசமாகிவிட்டது. அரசாங்கம் டங்கன் சுற்றுச்சூழல் பூங்காவை ஊக்குவிக்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
தற்போது பெரிய பூங்காவின் நிலையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக ஒரு குழந்தைகள் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தலைவர்கள் பூங்காவின் நிலைமையை மேம்படுத்துவது பற்றி தங்களால் ஆன பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவற்றுள் பூங்காவில் மரம் நடுவது முக்கியமான ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications