புனித சிலுவைக்குன்று என்று அழைக்கப்படுகிற இந்த குரிசுமலா வாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. கிறிஸ்துவ மதத்தினருக்கு இது முக்கியமான புண்ணிய யாத்திரை ஸ்தலமாக விளங்குகிறது.
இங்குள்ள பால்பண்ணைகளுக்கும் இது பிரசித்தி பெற்றுள்ளது. பசுமையான தேயிலைத்தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காடுகளுடன் கூடிய மலைகள் இந்த குரிசுமலா மலையை சுற்றிலும் காணப்படுகின்றன.
இங்கிருந்து முருகன் பாறா கோயிலையும் நன்றாக பார்த்து ரசிக்க முடிகிறது. இந்த மலைப்பகுதியில் மலையேற்றம், கூடாரவாசம் மற்றும் பாராசூட்பறப்பு போன்ற அதிசாகச பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்காக வெகு தூரங்களிலிருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர்.
புனித வெள்ளி திருநாளின்போது பக்தர்கள் சிலுவையை ஏந்தியபடி இம்மலையில் ஏறி ஆசிரமத்தை அடைகின்றனர். உச்சியை நோக்கி செல்லும் மலைப்பாதையில் ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டுள்ள ஒரு அழகான புராதன வீடு ஒன்றையும் பயணிகள் பார்க்கலாம்.
இந்த வீட்டுக்கு அருகிலேயே ஒரு ரம்மியமான செயற்கை ஏரியும் உருவாக்கப்பட்டுள்ளது. லாரி பேக்கர் என்பவரால் இந்த வீடும் ஏரியும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தோ-ஸ்விஸ் திட்டத்தின் கீழ் குரிசுமலா ஆசிரம குருமார்களால் நடத்தப்படும் பால்பண்ணையையும் பயணிகள் இந்த குரிசுமலா மலையில் பார்க்கலாம்.