வாகமண் மலைவாசஸ்தலத்தில் உள்ள மற்றொரு முக்கியமான அம்சம் இந்த தங்கல் பாறா எனும் இடமாகும். இது இஸ்லாமிய மார்க்கத்தினருக்கான யாத்திரை ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது.
இங்குள்ள ஒரு பெரிய உருண்டை வடிவ பாறைக்கருகில் ஷீக் ஃபரிதுத்தீன் என்பவரின் சமாதி இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் உருஸ் திருநாளின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சமாதிஸ்தலத்திற்கு வருகை தருகின்றனர்.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி ஆப்கானிய சூஃபி ஞானி ஒருவர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இங்கு வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அருகிலெயே ஒரு பழைய குகை ஒன்றும் காணப்படுகிறது.
இக்குகைகளில் பழங்கால மூதாதையர் வசித்திருக்கலாம் என்பதாகவும் கருதப்படுகிறது. இந்த பாறைக்குகைக்கு விஜயம் செய்யும்போது நாம் கற்காலத்துக்கே போய்விட்ட உணர்வு ஏற்பட்டு சிலிர்க்க வைக்கிறது.