வாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த முண்டகாயம் காட் எனும் இடம் உள்ளது. சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்க மிகபொருத்தமான காட்சித்தளமாக இது அறியப்படுகிறது.
பறவைகளை கண்டு ரசிக்கவும் இந்த முண்டகாயம் காட் உகந்ததாக உள்ளது. இந்த இடத்திலிருந்து சுற்றிலுமுள்ள இயற்கைக்காட்சிகளை உச்சிப்பார்வையாக பார்க்கலாம் என்பது ஒரு விசேஷமாகும்.
எனவே இது இயற்கை ரசிகர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பிரசித்தமான இடமாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சாகசப்பயணிகள் மத்தியில் வேறொரு காரணத்துக்காகவும் இந்த இடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதாவது, ‘பாராசூட் பறப்பு’ எனும் சாகச பொழுதுபோக்கு அம்சத்துக்காகவே இப்பகுதியில் ஒரு பிரத்யேக திருவிழா ஒன்று நடத்தப்படுகிறது. இதனை ASSTA எனும் சுற்றுலா கல்வி மைய அமைப்பு ஏற்பாடு செய்கிறது.
முண்டகாயம் காட் பகுதியில் நடத்தப்படும் இந்த பாராசூட் பறப்பு பொழுதுபோக்குகள் வாகமண் மலைவாசஸ்தலத்தை இன்னும் பரபரப்பான சுற்றுலாத்தலமாக மாற்றிவிட்டது என்றே சொல்லலாம்.