வைசாலி ஒன்றியத்தில் உள்ள ராம்சௌரா இராமரின் திருவடிகளின் அடையாளத்திற்காக புகழ் பெற்றிருக்கும் இடமாகும். இராமர் ஜானக்பூருக்கு சென்ற போது ராம்சௌராவில் தங்கியிருந்து குளிக்கச் சென்றார்.
அப்போது அவருடைய காலடிகள் இங்கே உருவாயின. எனவே இந்த இடத்தை இராமரின் பக்தர்கள் மிகவும் பக்தியுடன் வழிபடுகின்றனர் மற்றும் இந்த இடத்தை நோக்கி இராமரிடம் கொண்ட பக்தியுடன் படையெடுத்து வருகின்றனர்.
ராம்சௌரா பீகாரில் உள்ள முக்கியமான இராமாயண தலஙகளில் ஒன்றாகும். இராமரின் பிறந்த நாளான இராம நவமி இங்கே பெரும் பக்தி மற்றும் மத அடையாளத்துடன் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் தான் மகாவிஷ்ணு பூமிக்கு வந்து. தீயனவற்றை அழித்து, மகிழ்ச்சியையும் மற்றும் நீதியையும் நிலைநாட்டினார். இந்நாளில் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த அழகிய கிராமத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவார்கள். மேலும், நோன்பு மேற்கொண்டும், மத சடங்குகளை செய்தும் பக்தியை வெளிப்படுத்துவார்கள்.



Click it and Unblock the Notifications