சோலையாருக்கு புகழ்சேர்ப்பது, வால்பாறையில் இருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் மேல் சோலையார் அணை. ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை இது, ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கின்றது.
தமிழ் நாடு நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கின்றது. இந்த அணையை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அணையின் பிரம்மாண்டமான வலிமையும், பீரிட்டு வரும் நீரும், பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சி ஆகும். இதன் அமைதியான இருப்பிடத்தின் காரணமாக, ஆண்டுதோறும் இந்த அணை சுற்றுலா பயணிகளால் நிறைந்து காணப்படுகின்றது.



Click it and Unblock the Notifications