வாரணாசி, இந்துத்துவம், பௌத்தம், ஜைன மதம் மற்றும் இஸ்லாம் போன்ற நாட்டின் முக்கியமான மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பிரதிநிதிகளாக விளங்கும் பல கோயில்களைக் கொண்ட நகரமாகப் போற்றப்படுகிறது.
இந்நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகள், சுபர்ஷாவ், சந்தாபிரபு, பர்ஷ்வ்நாத், ஷ்ரீயாஸ் மற்றும் பார்ஷ்வா என்ற ஐந்து ஜைன தீர்த்தங்கரர்கள் அல்லது மதப்பிரசாரகர்களின் பிறப்பிடமாக தங்களின் பெருமையைப் பேசுகின்றன.
ஜைனக்கோயில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலும், வாரணாசியின் பேல்பூரில் உள்ள ஸ்ரீ பர்ஷ்வநாத் திகம்பர ஜைன தீர்த்த ஷேத்திரத்தில் உள்ள பனாரஸ் இராணுவ முகாமிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கோயில் 800 பிசியில் வாரணாசியில் பிறந்தவரான பர்ஷ்வ்நாத் என்ற இருபத்து மூன்றாவது ஜைன மத தீர்த்தங்கரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த மேன்மை பொருந்திய கோயில், அதற்கு வருகை தருவோரின் கண்களுக்கு அசல் விருந்தளிப்பதாகத் திகழ்கிறது. இதன் தங்கத்தாலான கோபுரக் கூம்புகள், தூரத்திலிருந்து பார்ப்போரின் கவனத்தையும் கவரக்கூடியதாக உள்ளன.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், இவ்வளாகத்தினுள் நுழையும் போதே அவர்களுக்கு மன நிம்மதியையும், அமைதியையும் தரக்கூடியதாக இது உள்ளது. இக்கோயில், வருடத்தின் எந்த நேரத்திலும் சென்று வரக்கூடியதாக இருப்பினும், ஜனவரி மாதத்தின் முதல் வாரம் இங்கு செல்வதற்கு மிகவும் உற்ற காலமாகும்.