கங்கவரம் பீச் என்று அழைக்கப்படும் இந்த கடற்கரை விசாகப்பட்டிணம் இரும்பு ஆலை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகிலேயே உள்ளது. தென்னை மரங்களின் அணிவகுப்புடன் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் அழகு பயணிகளால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.
எனவே சமீப காலமாக சினிமா படப்பிடிப்புகளும் இங்கு அதிகம் நடத்தப்படுகின்றன. இனிமையான சூழல் மற்றும் அமைதி நிலவுவதால் ஏகாந்தத்தை விரும்பும் பயணிகள் இந்த கடற்கரையை நாடி வருகின்றனர்.
கடலின் நடுவே எழும்பி நிற்கும் பிட்ட கொண்டா மலையையும், கடற்கரைக்கு எதிரேயுள்ள மலையில் வீற்றிருக்கும் கிருஷ்ணா கோயிலையும் இந்த கங்கவரம் பீச் கடற்கரையிலிருந்து பார்த்து ரசிக்கும் அனுபவத்திற்காக இங்கு ஏராளமான பயணிகள் விஜயம் செய்கின்றனர்.